Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
இனிப்பு, கார வகைகளின் தரத்தை உறுதிப்படுத்த சென்னையில் நடமாடும் உணவு பரிசோதனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தொடங்கி வைத்தார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார வகைகளை மக்கள் வாங்குவது வழக்கம். அவற்றின் தரத்தை உறுதிசெய்து உடனடியாக முடிவுகளை அறிய, நடமாடும் உணவு பரிசோதனை வாகனத்தின் மூலம் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்தது. சென்னை பாண்டிபஜாரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த வாகன சேவையை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, பாண்டிபஜார், வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய், நெய் மற்றும் இதர மூலப் பொருட்களின் தரம், இனிப்பு, கார வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
தினமும் 100 உணவு மாதிரிகளை ஆய்வு செய்ய உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT