சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: தண்டையார்பேட்டையில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது

சென்னையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: தண்டையார்பேட்டையில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது
Updated on
1 min read

தமிழக அரசு சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தண்டையார்பேட்டை துறைமுக பொறுப்புக் கழக விளையாட்டு அரங்கில் இன்று நடக்கிறது.

தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன் னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங் கள் மூலம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, துறைமுக பொறுப்புக் கழக விளையாட் டரங்கில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல், பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு நிலவரப்படி, இந்த முகாமில் பங் கேற்க இணையதளம் மூலம் 65 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, பதிவு செய்யாதவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்கள், பெண்கள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் என்பதால், வேலைவாய்ப்புத்துறை விரிவான பாதுகாப்பு மற்றும் வசதிகளை செய்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முகாமுக்கு வரும் அனைவருக்கும் போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதால் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், முகாம் நடக்கும் இடத் துக்கு அருகில் உள்ள திருவொற்றியூர் பஸ் நிலை யம், கிராஸ் ரோடு பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாமை, அமைச்சர்கள் பி.மோகன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்கள் 8 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in