Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

ரஜினி கட்சியின் வேட்பாளருக்கு சட்டப்பேரவை தேர்தலில் வாக்களியுங்கள்: சுய உதவிக்குழு பெண்கள் நாகையில் பிரச்சாரம்

ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் வேட்பாளருக்குதான் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நாகையில் நேற்று மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடுவீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நாகை அக்கரைக்குளம் பகுதியில் நேற்று, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடினர்.

நாகை அக்கரைக்குளம், மருந்து கொத்தளத் தெரு, கோட்டை வாசல்படி, கீரைக்கொல்லைத் தெரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வீடுவீடாகச் சென்ற அவர்கள், ரஜினிகாந்த் விரைவில் தொடங்கவுள்ள கட்சியின் வேட்பாளருக்கே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே மகளிர் சுய உதவிக் குழுவினர் நேற்று வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்தது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x