Last Updated : 03 Nov, 2020 02:58 PM

 

Published : 03 Nov 2020 02:58 PM
Last Updated : 03 Nov 2020 02:58 PM

புதுச்சேரியில் புதிதாக 149 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு: 91.39 சதவீதம் பேர் குணமடைந்தனர்

புதுச்சேரியில் இன்று புதிதாக 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 91.39 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (நவ. 3) கூறும்போது, "புதுச்சேரியில் 4,004 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-92, காரைக்கால்-13, ஏனாம்-7, மாஹே-37 என மொத்தம் 149 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 325 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வீடுகளில் 1,817 பேரும், மருத்துவமனைகளில் 628 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 2,445 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் 457 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 284 (91.39 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 17 ஆயிரத்து 809 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 253 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x