Published : 29 Oct 2015 09:14 AM
Last Updated : 29 Oct 2015 09:14 AM
தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள், டிக்கெட் முன்பதிவுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 10-ம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. மக்களின் வசதிக்காக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னை கோயம்பேட்டில் இருந்து 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள், சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் பல்லவன் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஓரிரு நாட்களில் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT