Last Updated : 30 Oct, 2020 03:45 PM

 

Published : 30 Oct 2020 03:45 PM
Last Updated : 30 Oct 2020 03:45 PM

புதுச்சேரியில் 35 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு; புதிதாக 149 பேருக்கு தொற்று: உயிரிழப்பு இல்லை

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (அக். 30) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரியில் இன்று 3,560 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-97, காரைக்கால்-27, ஏனாம்-12, மாஹே-13 என மொத்தம் 149 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் புதிதாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆகவே உள்ளது. இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34 ஆயிரத்து 908 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,845 பேர், காரைக்காலில் 158 பேர், ஏனாமில் 46 பேர், மாஹேவில் 53 பேர் என 2,102 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், புதுச்சேரியில் 1,411 பேர், காரைக்காலில் 60 பேர், ஏனாமில் 76 பேர், மஹேவில் 90 பேர் என 1,637 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 3,739 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இன்று புதுச்சேரியில் 81, காரைக்காலில் 29, ஏனாமில் 14, மாஹேவில் 4 என 128 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 577 (87.59 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 5,068 பரிசோதனைகள் செய்துள்ளோம். இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 632 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x