வளிமண்டலச் சுழற்சி; 4 தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலச் சுழற்சி; 4 தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 4 தென் மாவட்டங்களில் கனமழையும், 10 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 5 செ.மீ., உசிலம்பட்டி (மதுரை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 4 செ.மீ., ஆலங்குடி (புதுக்கோட்டை) 3 செ.மீ., மதுரை விமான நிலையம், முத்துப்பேட்டை (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), தளி (கிருஷ்ணகிரி), ஜெயன்கொண்டம் (அரியலூர்) தலா 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in