Published : 27 Oct 2015 08:35 AM
Last Updated : 27 Oct 2015 08:35 AM

அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுத்துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினி சான்றிதழ் தேர்வு (கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப் பிக்கும்போது கணினி தகுதி தேர்ச்சி பெறாவிட்டாலும் பணி கிடைத்தால் தகுதிகாண் பருவத்துக்கு முன்பாக கண்டிப்பாக கணினி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிற அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவம்பர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x