Published : 20 Oct 2020 07:25 AM
Last Updated : 20 Oct 2020 07:25 AM

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா

மல்லிகேஸ்வரர் மற்றும் கருகாத்தம்மன் கோயில்களில், நவராத்திரி விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில், உற்சவர் நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 3-ம் நாளான நேற்று, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மல்லிகேஸ்வரி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கருகாத்தம்மன் கோயிலில் ரேணுகாதேவி அலங்காரத்தில் கருகாத்தம்மன் அருள்பாலித்தார். மேலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x