Published : 20 Oct 2020 07:12 AM
Last Updated : 20 Oct 2020 07:12 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. தற்போது கிருஷ்ணா நதி நீர்வரத்தால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு கடந்த ஆகஸ்ட் வரை 8 மில்லியன் கோடி கனஅடி நீர்தான் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தொடர்மழை பெய்து வருவதால் தற்போது மீண்டும் கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 16.31 அடியாகவும், 1,780 மில்லியன் கன அடி நீர் இருப்பாகவும் உள்ளது. சென்னை குடிநீருக்கு தினந்தோறும் 59 கன அடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் இருந்து 3-ம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு சென்று கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட்டுக்கு செல்லும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT