வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஸ்ரீரங்கம் கோயிலில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி: டிச.25-ல் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே நேற்று நடப்பட்ட முகூர்த்தக் கால்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே நேற்று நடப்பட்ட முகூர்த்தக் கால்.
Updated on
1 min read

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகே கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் நேற்று முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, டிச.15-ம் தேதி முதல் டிச.24-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாக்களும், டிச.24-ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும் நடைபெற உள்ளன. முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு டிச.25-ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும்.

டிச.31-ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவையும், ஜன.1-ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும், ஜன.3-ம் தேதி தீர்த்தவாரியும், ஜன.4-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in