Published : 19 Oct 2020 07:18 AM
Last Updated : 19 Oct 2020 07:18 AM
தற்போதைய நிலையில் தீபாவளிபண்டிகையை எப்படி கொண்டாடுவது என நாடே திகைத்திருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் பிரஸ்ஸி முகக்கவசங்களால் ஆன மேற்கத்திய ஆடையை வடிவைத்துள்ளார்.
கோவையை பிறப்பிடமாகக் கொண்ட திருநங்கை பிரஸ்ஸி சென்னையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப்டிசைனில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்ற இவர், திருநங்கைகளால் ஃபேஷன் உலகிலும் சிறந்து விளங்க முடியும் என நிரூபித்துள்ளார். மேலும் பல திருநங்கைகளுக்கு ஆன்லைனில் ஃபேஷன் வகுப்புகளை எடுத்து வருகிறார்.
பிரஸ்ஸி சமீபத்தில் ‘முகக்கவச ஆடைதான் எதிர்கால ட்ரெண்டாக இருக்கும்’ என்ற மீம் சமூக வலைதளங்களில் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு புதிய முகக்கவச ஆடையை வடிவமைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT