Published : 19 Oct 2020 06:51 AM
Last Updated : 19 Oct 2020 06:51 AM

கிரிக்கெட் வீரர் தோனிக்காக தன் வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றிய கிராமத்து ரசிகர்

தோனியின் தீவிர ரசிகரானகோபிகிருஷ்ணன் என்பவர், தனதுவீட்டை மஞ்சள் வண்ணத்துக்கு மாற்றி, ‘தோனி ரசிகரின் வீடு’ என எழுதி, சிஎஸ்கே அணிமற்றும் தோனியின் மீதானஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், கடந்த 2008-ம் ஆண்டு வேலைக்காக துபாய் சென்றார். அங்கும் 20 பேர்கொண்ட அணியில் இணைந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். ஐபிஎல் போட்டிக்கு பின் சென்னை அணியின் தீவிர ரசிகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சொந்த ஊர் திரும்பிய கோபிகிருஷ்ணன், ஐபிஎல் போட்டியை ஆர்வத்துடன் பார்த்து வருகிறார். இதற்கிடையே தனது வீட்டை மஞ்சள் வண்ணத்துக்கு மாற்றி, ‘தோனி ரசிகரின் இல்லம்’என எழுதி, தோனியின் படத்தையும்வரைந்து தோனியை பெருமைப்படுத்தியுள்ளார்.

வெற்றி தோல்வி சகஜம்

இதுதொடர்பாக கோபிகிருஷ்ணனிடம் பேசியபோது, “சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வமுண்டு. தோனி விளையாடும் ஆட்டத்தை காணத் தவறுவதில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சில தோல்விகளை சந்தித்ததால் அணியும், தல தோனியும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர்.

விளையாட்டில் வெற்றி - தோல்வி சகஜம். அவர் மீதான விமர்சனம் தேவையற்றது. எனவே தான் அவருக்கும், தோனியின் ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 10 தினங் களுக்கு முன் ரூ.1.5 லட்சம் செலவில் வீட்டின் வண்ணத்தை சிஎஸ்கே அணியின் நிறத்துக்கு மாற்றியமைத்தேன்.

எங்க தல தோனிக்கு நான் செய்யும் மரியாதை இது. பலரும் எங்கள் வீட்டை பார்த்து விட்டு, பாராட்டிச் செல்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x