Last Updated : 18 Oct, 2020 01:23 PM

 

Published : 18 Oct 2020 01:23 PM
Last Updated : 18 Oct 2020 01:23 PM

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகே கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி இன்று (அக். 18) நடைபெற்றது.

தொடர்ந்து, டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகமும், டிச.15-ம் தேதி முதல் டிச.24-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாக்களும், டிச.24-ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும் நடைபெறும்.

முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு டிச.25-ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும்.

தொடர்ந்து, டிச.31- ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவையும், ஜன.1-ம் தேதி திருமங்கை மன்னன் வேடபரி விழாவும், ஜன.3-ம் தேதி தீர்த்தவாரியும், ஜன.4-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x