கீழணை, வீராணம் எரியில் இருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கீழணை, வீராணம் எரியில் இருந்து தண்ணீர் திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Updated on
1 min read

கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட பாசனத்துக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''கடலூர், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதை ஏற்று கீழணை, வீராணம் ஏரியி்ல் இருந்து சாகுபடிக்காக 3-ம் தேதி (இன்று) முதல் தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன். இதனால் கடலூர், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in