மீன் வள படிப்புகளில் மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மீன் வள படிப்புகளில் மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
Updated on
1 min read

தமிழக மீன்வளத் துறைஅமைச்சரும், மீன்வள பல்கலைக்கழக இணைவேந்தருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஎப்எஸ்சி, பிடெக் மற்றும் 4 இளநிலை தொழில்சார் படிப்புகள், பிபிஏ ஆகியவற்றில் சேருவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 26-ம் தேதி ஆகும். பிளஸ்- 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வருகிற 29-ம் தேதி வெளியிடப்படும்.

மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவின்கீழ் பிஎப்எஸ்சி படிப்பில் 6 இடங்களும், மீன்வள பொறியியல் படிப்பில் 2 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் 94426 01908 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in