Published : 15 Oct 2020 06:40 PM
Last Updated : 15 Oct 2020 06:40 PM

தமிழகத்தில் இன்று மட்டும் 4,410 பேருக்குக் கரோனா; சென்னையில் 1,148 பேருக்குத் தொற்று உறுதி; 5,055 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று மட்டும் 4,410 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (அக்.15) வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று மட்டும் 4,410 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 2,660 பேர். பெண்கள் 1,750 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 74 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 7,577 பேர். பெண்கள் 2 லட்சத்து 67 ஆயிரத்து 193 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 32 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 10 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 64 ஆயிரத்து 225 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 85 ஆயிரத்து 567 பேர்.

இன்று மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 752. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 86 லட்சத்து 74 ஆயிரத்து 793.

இன்று மட்டும் 89 ஆயிரத்து 67 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 84 லட்சத்து 29 ஆயிரத்து 741 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 22 பேர், அரசு மருத்துவமனைகளில் 27 பேர் என, 49 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 2 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 47 பேர்.

தமிழகத்தில் தற்போது வரை 41 ஆயிரத்து 872 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 5,055 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 458 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 126 என, மொத்தம் 192 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,148 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,473 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்து 304 பேர் (வீட்டு சிகிச்சையில் இருப்போர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x