Published : 25 Mar 2014 10:00 AM
Last Updated : 25 Mar 2014 10:00 AM

2ஜி வழக்கில் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்: ஆ.ராசா

வரும் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகப் போவதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார்.

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதகையில் திங்கள்கிழமை நடை பெற்றது. இதில் ஆ.ராசா பேசியது:

சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் முதல் வர் ஜெயலலிதா 18 முறை வாய்தா வாங்கியுள்ளார். ஆனால் என் மீது போடப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகிறேன்.

வரும் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் விசாரணையில் நேரில் ஆஜராக உள்ளேன். இந்த வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார்.

இந்நிலையில் பாஜக-வில் இருந்து விலகிய மூத்த வழக்கறிஞர் எல்.சந்திரசேகரனுடன் குன்னூர் வட்டார பாஜக நிர்வாகிகள் 50 பேர் ஆ.ராசா முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x