Published : 15 Oct 2020 07:36 AM
Last Updated : 15 Oct 2020 07:36 AM
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை (அக்.16) முதல் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக அனைத்துஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கால் கடந்த 5மாதங்களுக்கும் மேலாக ஆம்னிபேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, 6 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்யவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. ஆம்னி பேருந்துகளைஇயக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, பண்டிகை நாட்கள் நெருங்கவுள்ளதால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு வரும் 16-ம் தேதி முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT