சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு: அரசிடம் முறையிட உயர் நீதிமன்றம் உத்தரவு

சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு: அரசிடம் முறையிட உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்டம் வாரியாக குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் முறையிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த கிருபாராணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன். என் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த திருமணம் நடந்தது. எங்களை என் குடும்பத்தினர் மிரட்டி வருகின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்டம் வாரியாக சிறப்புக்குழு அமைக்க 2016-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.

என் குடும்பத்தினர் மிரட்டல் குறித்து போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் தலைமையில் குழு அமைத்து சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை மிரட்டுவோர் மீது உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்து, சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்டம் வாரியாக சிறப்பு குழு அமைக்க வேண்டும் என 2016-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலுடன் மனுதாரர் அரசிடம் முறையிட்டு தீர்வு காணலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in