Published : 14 Oct 2020 10:03 AM
Last Updated : 14 Oct 2020 10:03 AM

நிதி உதவிபெறும் ஆசிரியர்கள் 12-வது நாளாக தொடர் போராட்டம்: எதைப் பற்றியும் கவலைபடாமல் இருப்பதா? - புதுச்சேரி அரசுக்கு திமுக கேள்வி

10 மாதத்திற்கும் மேலாக நிலு வையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கக்கோரி புதுச்சேரி அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 1-ம் தேதி முதல் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுஎந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணிக் கட்சியான திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ போராட்டம் நடக்கும் இடத்துக்கு நேற்று சென்றார். அங்கு ஆசிரியர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளால் ஆசிரியர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகம் கணக்கு தரவில்லை என்பதற் காக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இருப் பதும் சரியல்ல. ஆசிரியர்கள் நிம்ம தியாகவும், மன நிறைவாகவும் பாடம் கற்றுத் தருவதற்கான சூழ் நிலையை அரசு உருவாக்கித்தர வேண்டும்.

ஓய்வுபெற்ற 450 ஆசிரியர்க ளுக்கு கடந்த 10 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ஓய்வூதியத்தில்தான் அவர்கள் மருத்துவச் செலவுகளை மேற் கொண்டு வந்திருப்பர். இதை அதி காரத்தில் இருப்பவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

புதுச்சேரியில் இன்று (நேற்று)பாசிக், பாப்ஸ்கோ, பொதுப் பணித்துறை, சுதேசி, பாரதிமில்,ஆசிரியர்கள் என 10-க்கும் மேற் பட்ட தரப்பினர் ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதை அவமானமாக நினைக்கிறோம்.

எப்படி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்ற சிந்தனைஆட்சியாளர்களுக்கு இருக்கக்கூடாது. ஆட்சியில் இருப்பவர்க ளுக்கு சுய கவுரவம் வேண்டும். நாடு முழுவதும் உள்ள சட்டத்தைக் கூட, புதுச்சேரியில் உள்ள நிதி உதவிபெறும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தாமல் இருக்கும் அடாவடி அதிகாரிகளுக்கு பாடம்புகட்ட வேண்டும். இப்பணியை முதல்வர் கையில் எடுக்காவிட்டால் மக்களும், பிற அரசியல் கட்சியினரும் எடுக்கும் நிலை உருவாகும் என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x