Published : 10 Oct 2020 10:34 AM
Last Updated : 10 Oct 2020 10:34 AM

சித்த மருத்துவத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துள்ளது: முதன்மை சித்த மருத்துவர் விக்ரம்குமார் தகவல்

நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களி டம் மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி களின் முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித் துள்ளதாக தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி அக்ரகாரம் அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 60 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத் தில் இதுவரை 490 பேர் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதில், 437 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இங்கு, சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதில், நேற்று நிலவரப்படி 5,611 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தா லும், நாட்றாம்பள்ளி அரசு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 7 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவது அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய மருத் துவ ஆராய்ச்சி மையத்தின் (CTRI) ஒப்புதலோடு நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத் தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு,சித்த மருத்துவம் சார்ந்த மருந் துகளின் ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதற்கான ஆய்வில் 20 கரோனா பாதித்தவர்கள் கலந்து கொண்ட னர். அதில், 19 பேர் 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆய்வின் ஆதார மாக உள்ளதாக சித்த மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.

நாட்றாம்பள்ளியில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நாட்றாம் பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் ஒருங் கிணைப்பாளரும், முதன்மை சித்த மருத்துவருமான வி.விக்ரம்குமார் கூறும் போது, "திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சித்த மருத்துவர் சுசி.கண்ணம்மாதீவிர முயற்சியால், நாட்றாம்பள்ளி யில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு, பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நமது முன்னோர்கள் எப்படி சமைத்து சாப்பிட்டார்களோ அதைப்போலவே பாரம்பரிய உணவுகளை சமைத்து கொடுத்து, கரோனா போன்ற கொடிய வைரஸில் இருந்து மீட்டெ டுக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கு, நல்ல பலனும் கிடைத் துள்ளது.

இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சித்த மருந்து கள் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோ தனை செய்தோம். மருந்துகள் சாப்பிட்ட பிறகும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்து பார்த்தபோது மிகப்பெரிய மாற்றங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக IL-6, LDH, D-Dimer, COVID Anti Body என்ற ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருந்துகளின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கரோனா காரணமாக ரத்தத்தில் அதிகரித்திருந்த பல பாதிப்புகள் ஆய்வின் முடிவில் குறைந் திருப்பதை பார்க்க முடிகிறது.

ரத்த தட்டணுக்களின் எண்ணிக் கையும், வெள்ளை ரத்த அணுக் களின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது. மேலும், இருமல், சளி, மூக்க டைப்பு, மணம் அறியாமை, சுவை அறியாமை, தொண்டைக்கரகரப்பு ஆகிய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சித்த மருந்துகள் மூலம் படிப்படி யாக குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களி டம் இருந்து மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் உலகை திரும்பிப்பார்க்கும் விதமாக அமைந் துள்ளன. இதற்கான ஆய்வறிக் கையை தற்போது தொடங்கியுள் ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x