

தூத்துக்குடியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது நேற்று தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி புதுத்தெருவைச் சேரந்த பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், புதுத்தெருவைச் சேர்ந்த ரெமிஸ் டன், குரூஸ்புரத்தைச் சேர்ந்த மச்சி முகம்மது, ஜெரால்டு, அலங்காரத் தட்டைச் சேர்ந்த ரீகன், பூபால்ராயர்புரத்தை சேர்ந்த மில்டன், சுனாமி காலனியைச் சேர்ந்த பிரம்மோத், பிரின்ஸ் ஜோ ஆகிய 7 மீனவர்கள் கடந்த 24-ம் தேதி நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடலுக்குள் 4 நாட்களுக்கு படகில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு பின்னர் அவர்கள் கரைக்கு திரும்புவார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் அவர்கள் கரைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.
இதனிடையே இந்த 7 மீனவர்களையும், அவர்களது நாட்டுப்படகையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள தகவல் நேற்று பிற்பகலில் தெரியவந்தது. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திசை தெரியாமல், இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் சென்றுவிட்டதாக தெரிகிறது.
தங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாக 7 மீனவர் களையும் படகுடன், இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று, கல்பிட்டிய முகாமில் வைத்து விசாரணை செய்து வருவதாக, தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக விசைப்படகு மீனவர்கள்தான் எல்லை தாண்டி சென்றதாக இலங்கை கடற் படையினரால் பிடித்துச்செல்லப் படுவர். ஆனால், முதன்முறை யாக நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற் கொள்ள வேண்டும் என்று உறவி னர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.