Published : 05 Oct 2020 07:50 AM
Last Updated : 05 Oct 2020 07:50 AM
சிறுமுகை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை -சத்தியமங்கலம் சாலையில்நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கோவைநோக்கி வந்து கொண்டிருந்த காரில் கோவை களிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அரவிந்த் (26), தொண்டாமுத்தூரைச் சேர்ந்தராஜன் (47), பிளிச்சி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (47), வீரகேரளத்தைச் சேர்ந்த நவீன்குமார் (45) ஆகியோர் இருந்துள்ளனர். காரை அரவிந்த் ஓட்டி வந்துள்ளார். இதேபோல, சிறுமுகையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி மற்றொரு கார் சென்றுள்ளது.
பெத்திக்குட்டையை அடுத்த ரங்கம்பாளையம் அய்யப்பன் கோயில் அருகே இரு கார்களும்நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், கோவைக்கு நோக்கி வந்த காரில் இருந்த அரவிந்த், ராஜன், மோகன்ராஜ், நவீன்குமார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு காரில் இருந்த வேலாண்டி பாளையத்தைச்சேர்ந்த கவுசல்(27), சிறுமுகையைச் சேர்ந்த பெல்ஜின் (25), தேவ்நாத் (27) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
சிறுமுகை காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT