Published : 05 Oct 2020 06:47 AM
Last Updated : 05 Oct 2020 06:47 AM

ஆளுநர் புரோஹித்துடன் முதல்வர் இன்று சந்திப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கிறார்

சென்னை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்கிறார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கிறார்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த செப்.30-ம் தேதி யுடன் 8-ம் கட்ட ஊரடங்கு முடி வடைந்த நிலையில், அக்.1-ம் தேதி யுடன் 9-ம் கட்டமாக சில தளர்வுகளு டன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த செப்.1-ம் தேதி யுடன் இ-பாஸ் முறை ரத்து செய் யப்பட்டதுடன், பேருந்து போக்குவரத் துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையிலும் ஆயிரத்துக்கு கீழாக குறைந்திருந்த தொற்று எண்ணிக்கை கடந்த 10 நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்த பாதிப்பை குறைக்கும் வகை யில், பரிசோதனைகளை அதிகரித்தல், மூத்த குடிமக்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கான பரிசோதனை முடிவுகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்கிறார். கரோனா பாதிப்பு தொடங்கிய பின் மாதந்தோறும் ஆளுநரை சந்தித்து அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளித்து, தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கமும் அளித்து வருகிறார். அந்த வகையில் இன்றும் ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார்.

சட்டம் ஒழுங்கு அறிக்கை

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டம் -ஒழுங்கு தொடர்பான அறிக்கையும் அளிப்பார் எனத் தெரிகிறது.

முதல்வருடன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலை மைச் செயலர் கே.சண்முகம் மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரும் ஆளுநருடனான சந்திப்பில் இடம் பெறுவார்கள் என்று கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x