Published : 29 Sep 2020 07:06 AM
Last Updated : 29 Sep 2020 07:06 AM

தெற்கு ரயில்வேக்கு புதிய கூடுதல் பொதுமேலாளர்

தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக பி.ஜி.மல்யா சென்னையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தெற்கு ரயில்வேயில் கூடுதல் பொதுமேலாளராக பணியாற்றிய பி.கே.மிஸ்ரா ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த பதவிக்கு தென்மேற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை மேலாளராக பணியாற்றி வந்த பி.ஜி. மல்யாவை ரயில்வே வாரியம் நியமனம் செய்துள்ளது. டெல்லி ஐஐடியில் பொறியியல் பட்டம் படித்த இவர், கடந்த 1985-ம் ஆண்டு ஐஆர்எஸ்இஇ எனும் இந்திய ரயில்வே தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியரயில்வேயில் பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார்.

இந்நிலையில், ரயில்வேவாரியத்தின் உத்தரவின்பேரில், தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக அவர் சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ரயில்வே அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x