Published : 18 Sep 2015 08:37 AM
Last Updated : 18 Sep 2015 08:37 AM

நீர்நிலைகளைக் கண்காணிக்கிறது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் மாசு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய அந்த நீர் நிலைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண் காணித்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியில் சிலைகள் நீர்நிலை களில் கரைக்கும்போது, நீர் மாசுபடுவதற்கான காரணங்களை அரசு கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து காகிதக் கூழ், களிமண், கிழங்கு மாவு, இயற்கை வண்ணம் மட்டுமே போன்றவற்றை பயன் படுத்தி சிலைகளை செய்ய வேண்டும். அவற்றை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வரு கிறது. இது போன்ற நீர் மாசுவை தடுக்கும் வகையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி யுள்ளது.

அதில் மாநில மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தால், 1 லட்சத்துக் கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்ட நீர்நிலைகளில், சிலைகளை கரைப்பதற்கு முன்பாகவும், சிலைகளை கரைக்கும்போதும், சிலைகளை கரைத்த பிறகும் நீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்து, நீர் மாசு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளை கண்காணித்து, நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x