Published : 01 Sep 2015 07:56 AM
Last Updated : 01 Sep 2015 07:56 AM

தந்தையின் குடிப்பழக்கத்தால் விபரீத முடிவா? - மகள், மகன் ஆற்றில் குதித்து தற்கொலை: மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்

தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அன்றாடம் தகராறு நிலவி வந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மகள், மகன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் அருகே சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. ஆற்றில் குதித்த மற்றொரு மகனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

கடலூர் முதுநகரை அடுத்த நடுத்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (55). லாரி ஓட்டுநர். இவருக்கு இன்பவள்ளி, செல்வி என்ற இரண்டு மனைவிகள். இருவரும் சகோதரிகள். செல் விக்கு ரமேஷ் (28), சரவணன் (26) ஆகிய 2 மகன்களும், இன்பவள்ளிக்கு பிரியா (20) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். ரமேஷ் தனியார் கம்பெனியில் ஊழியராகவும், சரவணன் எலட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தனர்.

மதுப்பழக்கத்தால் தகராறு

சக்கரவர்த்திக்கு குடிப்பழக் கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிள்ளைகள் 3 பேரும் தற்கொலை செய்து கொ்ள்வதற் காக நேற்று முன்தினம் இரவு உப்பனாற்றில் குதித்தனர். நேற்று காலை ஆற்றில் ரமேஷ், பிரியா இருவரும் பிணமாக மிதந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால், சரவணனை காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து முதுநகர் போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x