Last Updated : 26 Sep, 2020 12:36 PM

 

Published : 26 Sep 2020 12:36 PM
Last Updated : 26 Sep 2020 12:36 PM

புதுச்சேரியில் புதிதாக 555 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு; 500-ஐத் தொட்ட இறப்பு எண்ணிக்கை

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 555 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 32 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 26) கூறும்போது, "புதுச்சேரியில் 5,032 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தற்போது புதுச்சேரியில் 439, காரைக்காலில் 61, ஏனாமில் 21, மாஹேவில் 34 என மொத்தம் 555 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரியில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.92 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 26 ஆயிரத்து 32 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,841 பேர், காரைக்காலில் 487 பேர், ஏனாமில் 98 பேர், மாஹேவில் 26 பேர் என 3,452 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,493 பேர், காரைக்காலில் 172 பேர், ஏனாமில் 149 பேர், மாஹேவில் 61 பேர் என மொத்தம் 1,875 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,327 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 316 பேர், காரைக்காலில் 69 பேர், ஏனாமில் 22 பேர், மாஹேவில் 17 பேர் என மொத்தம் 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 205 (77.62 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 535 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 54 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x