Published : 25 Sep 2020 09:01 PM
Last Updated : 25 Sep 2020 09:01 PM

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

அரசு மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அரசு மரியாதையுடன் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ''தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x