Last Updated : 25 Sep, 2020 02:04 PM

 

Published : 25 Sep 2020 02:04 PM
Last Updated : 25 Sep 2020 02:04 PM

புதுச்சேரியில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று: புதிதாக 608 பேர் பாதிப்பு; மேலும் 7 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று 608 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 25) கூறும்போது, "புதுச்சேரியில் 5,515 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-481, காரைக்கால்-95, ஏனாம்-23, மாஹே-9 என மொத்தம் 608 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்.

மேலும், புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 25 ஆயிரத்து 489 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,751 பேர், காரைக்காலில் 489 பேர், ஏனாமில் 98 பேர், மாஹேவில் 22 பேர் என 3,360 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,478 பேர், காரைக்காலில் 178 பேர், ஏனாமில் 150 பேர், மாஹேவில் 48 பேர் என மொத்தம் 1,854 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 355 பேர், காரைக்காலில் 82 பேர், ஏனாமில் 31 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 781 (77.61 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 30 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 548 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் தினமும் 5,000-க்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகபட்சமாக 668 பேர், இன்று 608 பேர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 1,276 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்ததுடன், உயிரிழப்போர் எண்ணிக்கையும் 500-ஐ நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x