108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை: பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை: பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ரேவதி(21). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்ததைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸில் அய்யங்கார்குளம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரேவதிக்கு வலி அதிகமானது.

உடனே, 108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸிலேயே ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், குழந்தையும் காஞ்சிஅரசு தலைமை மருத்துவமனையின் பிரசவ வார்ட்டில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர். இரவு நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஊழியர்களை அதிகாரிகள் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in