Published : 25 Sep 2020 07:00 AM
Last Updated : 25 Sep 2020 07:00 AM
கரோனா தொற்று குறைந்துவருவதால் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. இதனால் மாமல்லபுரத்தில் விரைவில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விழிப்புணர்வு முகாம்,நேற்று நடைபெற்றது.
இதில், கரோனா தொற்று பரவாத வகையில் சுற்றுலா பயணிகளை எவ்வாறு அணுக வேண்டும், சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற வேண்டும், சானிடைசர், முகக் கவசம், கையுறை என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுவது குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் ராஜாராம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT