Published : 24 Sep 2020 11:52 AM
Last Updated : 24 Sep 2020 11:52 AM

விஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி; உடல்நிலை சீராக இருக்கிறது; மியாட் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும், மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான கரோனாஅறிகுறி தென்பட்டதாகவும், தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளதாகவும், தேமுதிக தலைமைக் கழகம் இன்று (செப். 24) தெரிவித்துள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று (செப். 24) வெளியிட்ட அறிக்கை:

"விஜயகாந்திற்கு கோவிட்-19 சோதனையில் கரோனா தொற்று இருப்பது செப்.22 அன்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது, அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.

அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்"

இவ்வாறு மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x