Published : 23 Sep 2020 07:29 AM
Last Updated : 23 Sep 2020 07:29 AM

மாமல்லபுரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் பேட்டரி கார்: தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு

மாமல்லபுரத்துக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்காக, பேட்டரி கார் இயக்குவதற்கான அடிப்படை வசதிகள் குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் வெவ்வேறு பகுதியில் உள்ள கலைச்சின்ன வளாகங்களுக்கு நடந்து செல்வதைத் தவிர்க்கும் வகையில், இலவசமாக பேட்டரி கார்களை இயக்கதொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராமன், கலைச்சின்ன வளாகங்களில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். இதில், பேட்டரி கார்களை நிறுத்தி இயக்குமிடங்கள், அவற்றை சார்ஜ் செய்ய மின்வசதியுடன் கூடிய இடவசதிகள் மற்றும் கலைச்சின்ன வளாகங்களில் சோலார் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆய்வில், மாமல்லபுரம் தொல்லியல் துறைஅலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தனியார் கார் தயாரிப்பு நிறுவன பணியாளர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கலைச்சின்னங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பகுதியில் இருப்பதால், சுற்றுலா பயணிகள் நடந்துசெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் முதியோர் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அதனால், நுழைவுச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு பேட்டரிகார்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x