Published : 23 Sep 2020 06:55 AM
Last Updated : 23 Sep 2020 06:55 AM

உதவித் தொகை பெறுவதற்காக இதுவரை 11 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை

சமூக பாதுகாப்பு உதவித் தொகையைப் பெற ஆன்லைனில் இதுவரை 11 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 40சதவீதம் மாற்றுத் திறனுடையவர்களுக்கு வருவாய்த் துறையின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 சமூகபாதுகாப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித் தொகையைப் பெற அவர்கள் நேரில் விண்ணப்பித்து வந்தனர். மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. சமூக பாதுகாப்பு உதவித்தொகையைப் பெற ஆன்லைனில்இதுவரை 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள் ளனர்.

இதுதொடர்பாக, வருவாய்த் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் சமூக பாதுகாப்பு உதவியாக ரூ.1,000 பெற்று வருகின்றனர். இ-சேவை மையங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைக்கு மாற்றுத் திறனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மார்ச் மாதம் முதல் ஆன்லை னில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்தாலும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் இருந்துதான் மாற்றுத் திறனாளிகள் அதிக அளவு விண்ணப்பிக்கத் தொடங்கினர். இதுவரை 11 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் உதவித் தொகை வழங்கப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x