Published : 22 Sep 2020 07:40 AM
Last Updated : 22 Sep 2020 07:40 AM
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதுபோல நாடகமாடும் திமுகவினரின் செயலை மக்கள் ஏற்க மாட்டார்கள். காவிரியின் குறுக்கே ஹேமாவதி அணை கட்டப்படாவிட்டால், காவிரி பிரச்சினையே வந்திருக்காது. மத்திய அரசில் பங்கு வகித்த திமுக, விவசாயம், நீர்வளத் துறை போன்ற துறைகளை கேட்டுப் பெறவில்லை. மாறாக, மாறாக பணம் கொழிக்கும் துறைகளுக்குத்தான் அமைச்சர்களாக இருந்தனர். மத்திய அரசுகளில் திமுக அங்கம் வகித்த 19 ஆண்டுகளும் விவசாயிகளுக்கு கறுப்பு ஆண்டுகளாகத்தான் இருந்தன.
அதிமுகவில் தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். சசிகலாவால் அல்ல. முதல்வர் பழனிசாமி தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தேர்வு செய்யப்பட்டவர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT