Published : 05 Sep 2015 04:44 PM
Last Updated : 05 Sep 2015 04:44 PM

சீனப் பட்டாசுகளை தடை செய்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அன்புமணி கடிதம்

இந்தியாவில் சீனப் பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, மத்திய தொழில் வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பாமக முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி எழுதிய கடிதத்தில், ''சீனப் பட்டாசுகள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவுவதை தடை செய்யவேண்டும், சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை செய்துதர வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x