Published : 21 Sep 2020 12:24 PM
Last Updated : 21 Sep 2020 12:24 PM

தருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றியவர் தனது பிறந்த நாளிலேயே உயிரிழந்த சோகம்

ராஜ்குமார் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய போது

தருமபுரி

தருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றியவர் தனது பிறந்த நாளிலேயே உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார். சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சீலி நாயக்கன்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று (செப். 20) தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். தருமபுரியில் காவல்துறையினருடன் கேக் வெட்டி எளிய முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்த ராஜ்குமார், வழக்கம்போல் இரவு உறங்கச் சென்றார். இந்நிலையில், நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தருமபுரி மாவட்ட காவல்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்குமார்: கோப்புப்படம்

காவல்துறையினருக்கு தங்கள் பணி சார்ந்து தொடர்ந்து மன இறுக்கம், வேலைப் பளு போன்ற பிரச்சினைகள் இருப்பதால் உடல் நலன் கெடுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும், காவல்துறையினருக்கு மன இறுக்கத்தைக் களைய யோகா போன்ற பயிற்சிகளை அவ்வப்போது வழங்கிட வேண்டும் என்றும், வேலைப் பளுவை குறைக்கும் வகையில் பணிச்சூழலில் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x