Published : 21 Sep 2020 07:12 AM
Last Updated : 21 Sep 2020 07:12 AM

300 தன்னார்வலர்களுக்கு மத்திய அரசு அனுமதி; ‘கோவிஷீல்டு’ பரிசோதனை 10 நாட்களில் தொடக்கம்: தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தொற்றுக் கான ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதரா பாத்தில் செயல்பட்டு வரும் ‘பாரத் பயோடெக்’ தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ எனும் கரோனா தொற்று தடுப்பு மருந்து 2-ம் கட்ட ஆராய்ச்சியில் உள்ளது. இந்நிலை யில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தின் ஆராய்ச்சி மையம் தயாரித் துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந் தின் முதல்கட்ட ஆராய்ச்சி நிறை வடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முறை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

சென்னை அரசு பொது மருத்துவ மனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உட்பட இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1,600 பேருக்கு இந்த தடுப்பு மருந்து பரிசோதனை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. சென்னை மருத்துவமனை களில் 300 பேரிடம் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பாளராக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குநர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

இதற்கிடையே, ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால், பரிசோத னையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆக்ஸ்போர்டு நிறு வனம் கடந்த வாரம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் பரிசோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பரிசோத னையை மீண்டும் தொடங்க ஆக்ஸ் போர்டு நிறுவனம் அனுமதி அளித் தது. இதையடுத்து, இந்தியாவிலும் பரிசோதனையை தொடங்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கு நரகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகா தாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “சென்னை மருத்துவமனை களில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந் தின் பரிசோதனை இன்னும் 10 நாட்களில் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. பரிசோதனையில் கலந்து கொள்ளும் 300 தன்னார் வலர்கள் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x