Published : 21 Sep 2020 06:49 AM
Last Updated : 21 Sep 2020 06:49 AM

தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கேரளாவில் அல்-காய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் டெல்லி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நேற்று முன்தினம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, அல்-காய்தா தீவிரவாதிகள் 9 பேரை கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் 6 பேர், கேரளாவின் எர்ணாகுளத்தில் 3 பேர் சிக்கினர். கேரளாவில் கைதான 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலருடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள் ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர். அல்-காய்தா இயக்கத் தில் சேருவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்ததாகவும் அவர்கள் குறித்த விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x