Published : 20 Sep 2020 07:16 AM
Last Updated : 20 Sep 2020 07:16 AM
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்துவருகின்றன. அதன்படி, கடந்த மாதத்தில் 843 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 821 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா தொற்று தடுப்புக்குபயன்படுத்தப்படும் 22 மருந்துகளும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள் சிலவும் தரமின்றி இருந்தது தெரியவந்தது. இதில், பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தமருந்துகளின் விவரம் https://cdsco.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT