Published : 22 Sep 2015 10:12 AM
Last Updated : 22 Sep 2015 10:12 AM

கலிங்கப்பட்டியில் இன்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கலிங்கப்பட்டியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

மதிமுக செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் இன்று (22-ம் தேதி) நடக்கிறது. இதற்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x