Last Updated : 18 Sep, 2020 02:02 PM

 

Published : 18 Sep 2020 02:02 PM
Last Updated : 18 Sep 2020 02:02 PM

புதுச்சேரியில் புதிதாக 490 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 490 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (செப். 18) கூறியதாவது:

"புதுச்சேரியில் 5,344 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 397, காரைக்காலில் 45, ஏனாமில் 43, மாஹேவில் 5 என மொத்தம் 490 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 5 பேர், காரைக்காலில் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 21 ஆயிரத்து 913 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,443 பேர், காரைக்காலில் 384 பேர், ஏனாமில் 144 பேர், மாஹேவில் 4 பேர் என 2,975 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,440 பேர், காரைக்காலில் 96 பேர், ஏனாமில் 216 பேர், மாஹேவில் 34 பேர் என மொத்தம் 1,786 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 353 பேர், காரைக்காலில் 69 பேர், ஏனாமில் 24 பேர், மாஹேவில் 16 பேர் என மொத்தம் 462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 715 (76.28 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 821 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 97 ஆயிரத்து 716 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x