Published : 18 Sep 2020 07:24 AM
Last Updated : 18 Sep 2020 07:24 AM

பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல்துறைக்கு ‘சிப்பிப்பாறை’ நாட்டு நாய் பரிசு: பாஜக வழக்கறிஞர் அணி வழங்கியது

சென்னை

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல் துறைக்கு சிப்பிப்பாறை ரக நாட்டு நாயை பாஜக வழக்கறிஞர் அணி பரிசாக வழங்கியுள்ளது.

பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் பகுதியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிரதமர் வேண்டுகோள்

பிரதமர் மோடி கடந்த 30-ம்தேதி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘தமிழகத்தின் ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற நாட்டு நாய் இனங்களை புறக்கணிக்காமல், அவற்றை எடுத்து கனிவுடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாட்டு நாய்களை காக்கும் விதமாக தமிழக காவல் துறையின் மோப்ப நாய் பிரிவுக்கு சிப்பிப்பாறை ரக நாட்டு நாய் ஒன்று, பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

எல்.முருகனிடம் இந்த நாய் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காவல் துறைக்கு பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் இனிப்புகளுடன், கரோனா தொற்று பாதுகாப்புக்காக கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x