Published : 17 Sep 2020 06:51 PM
Last Updated : 17 Sep 2020 06:51 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 5,560 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 992 பேர் பாதிப்பு: 5,524 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,560 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 992 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (செப்.17) கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,560 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,319 பேர். பெண்கள் 2,241 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 16 ஆயிரத்து 646 பேர். பெண்கள் 2 லட்சத்து 8,745 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுக்குட்பட்டவர்கள் 22 ஆயிரத்து 321 பேர். 13-60 வயதுக்குட்பட்டவர்கள் 4 லட்சத்து 34 ஆயிரத்து 681 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 68 ஆயிரத்து 418 பேர்.

இன்று 84 ஆயிரத்து 524 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 62 லட்சத்து 17 ஆயிரத்து 923 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 82 ஆயிரத்து 683 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 60 லட்சத்து 23 ஆயிரத்து 627 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 23 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 36 பேர் என, மொத்தம் 59 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 7 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 52 பேர்.

இன்று 5,524 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 46 ஆயிரத்து 610 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 108 என, மொத்தம் 174 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

தமிழகத்தில் இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 992 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 567 ஆக உயர்ந்துள்ளது. இன்று 956 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 9,874 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x