Published : 21 Sep 2015 12:06 PM
Last Updated : 21 Sep 2015 12:06 PM

தமிழக சட்டப்பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதி கோரினர்.

ஆனால், அவைத்தலைவர் தனபால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவையில் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதால் மார்க்சிஸ்ட் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அவையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள சபாநாயகர் தனபால், "பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கடும் முழக்கம் எழுப்பினர். அவையில் உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை:

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், "டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை. பேரவையில் விஷ்ணுபிரியா விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x