Last Updated : 16 Sep, 2020 12:56 PM

 

Published : 16 Sep 2020 12:56 PM
Last Updated : 16 Sep 2020 12:56 PM

புதுச்சேரியில் புதிதாக 518 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 13 பேர் உயிரிழப்பு; இதுவரை 75.43 சதவீதம் பேர் டிஸ்சார்ஜ்

புதுச்சேரியில் இன்று புதிதாக 518 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 75.43 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 16) கூறும்போது, "புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 5,709 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 423, காரைக்காலில் 58, ஏனாமில் 20, மாஹேவில் 17 என மொத்தம் 518 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்

புதுச்சேரியில் 10 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 418 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.98 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 21 ஆயிரத்து 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 2,555 பேர், காரைக்காலில் 345 பேர், ஏனாமில் 119, மாஹேவில் 9 பேர் என 3,028 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,411 பேர், காரைக்காலில் 95 பேர், ஏனாமில் 202 பேர், மாஹேவில் 34 பேர் என மொத்தம் 1,742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 335 பேர், காரைக்காலில் 41 பேர், ஏனாமில் 22 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 401 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 923 (75.43 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 664 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 88 ஆயிரத்து 166 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x