Last Updated : 15 Sep, 2020 12:28 PM

 

Published : 15 Sep 2020 12:28 PM
Last Updated : 15 Sep 2020 12:28 PM

புதுச்சேரியில் 380 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 11 பேர் உயிரிழப்பு; 400-ஐக் கடந்த இறப்பு எண்ணிக்கை

புதுச்சேரியில் இன்று புதிதாக 380 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 601 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 405 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 15) கூறும்போது, "புதுச்சேரியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 5,496 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 270, காரைக்காலில் 63, ஏனாமில் 44, மாஹேவில் 3 என மொத்தம் 380 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரியில் 10 பேர், ஏனாமில் ஒருவர் என 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த 69 வயது முதியவர், புதுச்சேரி மோகன் நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, கரியமாணிக்கத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர், தன்வந்திரி நகர் கங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகிய 4 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தனர்.

கீழ்சாத்தமங்கலம் பழனி நகரைச் சேர்ந்த 38 வயது ஆண், சாரம் பிருந்தாவனம் 12-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 78 வயது முதியவர், முதலியார்பேட்டை தியாகிகள் வீதியைச் சேர்ந்த 49 வயது ஆண், இந்திரா நகர் மீனாட்சிபேட்டையைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, கொசப்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகிய 5 பேரும் ஜிப்மரில் உயிரிழந்தனர்.

முத்தியால்பேட்டை ரங்கவிலாஸ் தோட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், ஏனாம் கோபால் நகரைச் சேர்ந்த 50 வயது ஆண் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.97 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 20 ஆயிரத்து 601 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,530 பேர், காரைக்காலில் 347 பேர், ஏனாமில் 118, மாஹேவில் 9 பேர் என 3,004 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,366 பேர், காரைக்காலில் 78 பேர், ஏனாமில் 206 பேர், மாஹேவில் 20 பேர் என மொத்தம் 1,670 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,674 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

15 ஆயிரத்து 522 பேர் (75.35 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதுச்சேரியில் 435 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 42 மாஹேவில் 2 பேர் என மொத்தம் 495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 522 பேர் (75.35 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 771 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 83 ஆயிரத்து 944 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x