Published : 15 Sep 2020 07:30 AM
Last Updated : 15 Sep 2020 07:30 AM
பால்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது:
பால் கொள்முதலை உயர்த்துவதுடன், கொள்முதல் செய்யும் அனைத்து பாலையும் விற்பனை செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைத் தீவனம், தாதுஉப்பு கலவை உரிய காலத்தில் அளிக்கப்படுவதையும், பாலுக்கான பணம் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் பால் உற்பத்தி, கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடக்காமல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவேண்டும். தரமானபால் கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத் துறை செயலர் கே.கோபால், ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் எம்.வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT